செங்கல்பட்டு: செங்கல்பட்டு நகராட்சியில் ஆலுவலக ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள் என 220 பேர் பணியாற்றுகின்றனர். கடந்த சில நாட்களுக்கு முன் நகராட்சி ஆணையர் டிட்டோ மற்றும் இளநிலை உதிவியாளர் லிடியா செல்லக்குமார் ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதனால் நகராட்சி ஊழியர்கள் இடையே பெரும் பீதி ஏற்பட்டது. இதையடுத்து, நகராட்சி அலுவலகத்தை மூடவேண்டும் என ஊழியர்கள், அலுவலர்கள் கோரிக்கை வைத்தனர். பின்னர், செங்கல்பட்டு ஆர்டிஒசெல்வம் நகராட்சி அலுவலகத்தை ஆய்வு செய்து ஊழியர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்.