சென்னை: தங்கம் விலை வரலாற்றில் முதல் முறையாக ஒரு சவரன் 37 ஆயிரத்தை தாண்டியது. நேற்று ஒரு நாளில் மட்டும் ரூ.392 அதிகரித்தது. கொரோனா வைரஸ் ஒருபுறம் மக்களை வாட்டி வதைத்துக் கொண்டிருக்கிறது. மற்றொரு புறம், பெட்ரோல், டீசல், அத்தியாவசிய பொருட்களின் விலை உயர்வு பாடாய் படுத்துகிறது. இதோடு, தங்கம் விலையும் சேர்த்துக் கொண்டு, ஏற்கனவே மகிழ்ச்சியை துறந்த மக்களின் வாழ்க்கையில், சுப நிகழ்ச்சிகளையும் நடத்த விடாமல் கசக்கப் பிழிகிறது. கடைகள் மூடி இருந்தாலும், வாங்குவதற்கு ஆளில்லை என்றாலும் தங்கத்தின் விலை மட்டும் தொடர்ந்து ஏறி கொண்டே இருக்கிறது.