சென்னை: நாட்களை வீணடிக்காமல், கொரோனா பேரழிவிலிருந்து மக்களை காப்பாற்ற தமிழக அரசுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார். கொரோனா தொற்று கண்டறியப்பிட்டபின் 90 நாட்களை தமிழக அரசு வீணடித்துவிட்டதாக ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த ஊரடங்கு மட்டுமே வழி என்று மத்திய, மாநில அரசுகள் நினைத்துவிட்டன. ஊரடங்கால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகள் சிறிதளவும் உதவவில்லை என ஸ்டாலின் புகார் தெரிவித்துள்ளனர்.