சென்னை மருத்துவக் கல்லூரியின் புதிய முதல்வராக தீரனிராஜன் நியமனம்

சென்னை: சென்னை மருத்துவ கல்லூரியின் புதிய முதல்வராக தீரனிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார். சென்னை ராஜிவ் காந்தி அரசு பொது மருத்துவமனை மற்றும் சென்னை மருத்துவ கல்லூரியின் முதல்வராக செயல்பட்டு வந்த ஜெயந்திக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால் அவர் மருந்துவ விடுப்பில் சென்றார். இதை தொடர்ந்து, சென்னை மருத்துவ கல்லூரியின் பொறுப்பு முதல்வராக இயக்குனர் நாராயணசாமி நியமிக்கப்பட்டார்.

இந்நிலையில், சென்னை மருத்துவ கல்லூரியின் புதிய முதல்வராக தீரனிராஜனை நியமித்து சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். பெரம்பலூர் மருத்துவக் கல்லூரி முதல்வரான தீரனிராஜன் மாற்று பணி அடிப்படையில் கரூர் மருத்துவக் கல்லூரியின் முதல்வராக பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related Stories: