திருவனந்தபுரம்: கேரளாவில் கொரோனாவுக்கு அடுத்தபடியாக டெங்கு, எலிக்காய்ச்சல் வேகமாக பரவி வருவது மக்களுக்கு பீதியை ஏற்படுத்தி உள்ளது. கேரளாவில் கட்டுப்படுத்தப்பட்டு இருந்த கொரோனா நோய் பரவல், கடந்த சில தினங்களாக மீண்டும் அதிகமாகி வருகிறது. இந்த நோயாளிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. கடந்த 3 நாட்களில் மட்டும் 378 பேருக்கு புதிதாக தொற்று உறுதியாகி உள்ளது. கொரோனா வேகமாக பரவி வருவதால் திருவனந்தபுரம், மலப்புரம், கண்ணூர் உள்பட பல்வேறு பகுதிகளில் ஊரடங்கு சட்ட நிபந்தனைகள் கடுமையாக்கப்பட்டு உள்ளன.