நாமக்கல்: தமிழகத்தில் காற்றாலை மின்சார உற்பத்தி தற்போது ஒரு நாளைக்கு 4 ஆயிரம் மெகாவாட் உள்ளதாக மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். நாமக்கல் மாவட்டம் ஆனங்கூர் தண்ணீர் பந்தல்பாளையம் அரசு பள்ளிகளுக்கு சுற்றுச்சுவர் கட்டும் பணிகளை மின்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார். அதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது; டாஸ்மாக் கடைகளில் சிசிடிவி கேமரா பொருத்தும் பணி 3 மாதங்களுக்குள் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளார். கொரோனா காரணமாக தமிழகம் முழுவதும் 5-ம் கட்ட ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் பல்வேறு தளர்வுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.