நெல்லை: நெல்லை மாநகர பகுதியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. உயிரிழப்புகளும் படிப்படியாக உயரத் தொடங்கியுள்ளது. நெல்லை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் நேற்று முன்தினம் 2 பேர் அடுத்தடுத்து உயிரிழந்தனர். இதில் அரசு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை புறநோயாளிகள் பிரிவில் தற்காலிகமாக பணியாற்றி வந்த 34 வயது இளைஞரும் ஒருவர். இவர் குறித்து உருக்கமான தகவல்கள் வெளியாகி உள்ளன. இவரது சொந்த ஊர் தூத்துக்குடி மாவட்டம் கொங்காராயகுறிச்சி. பாளை சாந்திநகரில் வசித்து வந்தார். திருமணம் ஆகவில்லை. முதுநிலை வேதியியல் பட்டதாரியான இவர், கடந்த சில மாதங்களாக ஜிஹெச்சில் பணியாற்றி வந்தார்.