சென்னை: சென்னையில் கொரோனா தடுப்பு பணியில் நியமிக்கப்பட்ட மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகள் விடுவிக்கப்பட்டனர். சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு தீவிரமாக உள்ளது. இந்த மாவட்டங்களில் கொரோனா தடுப்பு பணிகளை கண்காணிக்க ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள், மாவட்ட வருவாய்த்துறை அலுவலர், சுகாதாரத்துறை அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில், தற்போது மேலும் 3 ஐஏஎஸ் அதிகாரிகளை விடுவித்து தமிழக அரசின் தலைமை செயலாளர் சண்முகம் உத்தரவிட்டுள்ளார்.