* இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் குழந்தைகள், மனைவி கதறல்
* மக்களின் மனதை உருக்கும் சமூகவலைதள வீடியோநோய் தொற்று ஏற்படும் என்பதால் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மற்றும் சுகாதாரத்துறை அதிகாரிகள் உடல் அருகே விடாமல் தடுத்தனர். இருந்தாலும், அவரது மகள் ஹர்ஷவர்தனி, ‘ப்ளீஸ் ஒரு நிமிஷம் இருங்க என்று கூறியபடி பாதுகாப்புக்கு இருந்த அனைவரையும் மீறி தனது தந்தையை பார்க்க துடித்தார். ஆனாலும் அவரை விடாமல் தடுத்தனர். அதையும் மீறி ‘அய்யோ என் அப்பாவை பார்க்கணும் விடுங்க... அய்யோ அப்பா... ஒரு நிமிஷம் விடுங்க... எங்க அப்பாவை தொட விடுங்க ப்ளீஸ்...’ என்று அழுது துடித்தனர்.
ஆனாலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் நோய் தொற்று பரவும் என்பதால் பாலமுரளி உடலை அமரர் ஊர்தியில் ஏற்றி ெசன்றனர். அவரது மனைவி கவிதா அமரர் ஊர்தியை பிடித்தபடி சிறிது தூரம் ஓடினார். இதை பார்த்த மருத்துவமனையில் இருந்த சிலர் கண்கலங்கி செய்வது தெரியாமல் திகைத்து நின்றனர். இன்ஸ்பெக்டர் பாலமுரளியின் முகத்தை பார்க்க அவரது இரண்டு குழந்தைகள் மற்றும் மனைவி படும் காட்சி, நேற்று வீடியோவாக சமூக வலைதளங்களில் வெளியாகி மக்கள் மற்றும் போலீசாரிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.