தனிச்செயலாளர் பலியை தொடர்ந்து முதல்வர் அலுவலகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா?

சென்னை : முதல்வர் எடப்பாடி அலுவலகத்தில் மேலும் 4 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தலைமை செயலக ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர். தலைமை செயலகத்தில் உள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியின் அலுவலகத்தில் பணிபுரியும் தனி செயலாளர் தாமோதரன், கடந்த 18ம் தேதி அதிகாலை கொரோனாவுக்கு பலியானார். இந்நிலையில்  முதல்வர் அலுவலகத்தில் சிலருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் மேலும் 4 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.  இதனால் தலைமை செயலக ஊழியர்கள் பீதி அடைந்துள்ளனர்.

Related Stories: