சென்னை: தமிழகத்தில் அடுத்த 24 மணி நேரத்திற்குள் 10 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவகாற்றோடு வெப்பசலனமும் மழை பெய்ய காரணம் என்று வானிலை மையம் கூறியுள்ளது. கோவை, நீலகிரி, தேனி, தஞ்சாவூர், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, ராமநாதபுரம், விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிதமான மழை பெய்யக்கூடும். மேற்கில் இருந்து தரைக்காற்று வெப்பமாக வீசுவதால் சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் , வேலூர், விழுப்புரம், மதுரை ஆகிய மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் பகலில் அதிகபட்ச வெப்பநிலை 104 டிகிரி பாரேன் ஹீட் அளவு எட்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னையை பொறுத்தவரை மாலை நேரத்தில் வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும்.