சென்னை: சென்னையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுவதில் அலட்சிய போக்கு காணப்படுவதாக உயிரிழந்த ஒருவரின் குடும்பத்தினர் குற்றம் சாட்டியுள்ளனர். சென்னையில் கடந்த 2ம் தேதி உடல்நிலை சரியில்லாமல் 59 வயது முதியவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு சென்றுள்ளார். அங்கு அவருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. பின்னர் அவர் வீடுதிரும்பினார். இதையடுத்து உடல்நிலை மிகவும் மோசமானதை தொடர்ந்து, அவர் மீண்டும் ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். ஆனால் வழியிலேயே அவர் உயிர் பிரிந்தது. இதனை தொடர்ந்து, முதியவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று மருத்துவர்கள் கூறியதை நம்பி, முதியவரின் சடலம் கடந்த 3ம் தேதி முறையாக அடக்கம் செய்யப்பட்டது.