புதுடெல்லி: நாடு முழுவதும் கொரோனா நோய் தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் தெலங்கானா மாநிலத்தில் வைரஸ் தொற்று எண்ணிக்கையும், இறப்பு விகிதத்தையும் குறைத்துக் காட்ட அரசு முயல்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதனைத் தொடர்ந்து தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்குகளை விசாரித்த அம்மாநில உயர் நீதிமன்றம் தெலுங்கானாவில் இறக்கும் ஒவ்வொருவரின் உடலையும் உறவினர்களிடம் ஒப்படைக்கும் முன்னதாக கொரோனா தொற்று பரிசோதனை செய்ய வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. இந்த நிலையில், உயர் நீதிமன்றத்தின் உத்தரவிற்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தெலங்கானா அரசு தரப்பில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.