கொடுத்த பணத்தை திரும்ப கேட்டதால் நிதி நிறுவன அதிபருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை, 6 பேர் கொண்ட மர்மநபர்கள், சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.

காஞ்சிபுரத்தில், சந்தியப்பன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்தியப்பன், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில், தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே 2 பைக்கில் வந்த 6 பேர், அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால், அவர் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும், மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.

தகவலறிந்து காஞ்சிபுரம் தாலுகா போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, படுகாயமடைந்த சந்தியப்பனை மீட்டு, காஞ்சிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர்.அதில், சந்தியப்பன் சிலரிடம் பணம் கொடுத்துள்ளார். அதை திரும்ப கேட்டதற்காக, இச்சம்பவம் நடந்து இருக்கலாம் என கூறப்படுகிறது. இதற்கிடையில், இந்த வழக்கு தொடர்பாக  வீரமணி உள்ளிட்ட 2 பேரை  நேற்று கைது செய்து விசாரிக்கின்றனர்.

Related Stories: