காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருபவரை, 6 பேர் கொண்ட மர்மநபர்கள், சரமாரியாக அரிவாளால் வெட்டினர்.
காஞ்சிபுரத்தில், சந்தியப்பன் என்பவர் பைனான்ஸ் நிறுவனம் நடத்தி வருகிறார். நேற்று முன்தினம் இரவு சந்தியப்பன், காஞ்சிபுரம் பழைய ரயில் நிலையம் அருகே வையாவூர் சாலையில், தனது பைக்கில் சென்று கொண்டிருந்தார். அப்போது, எதிரே 2 பைக்கில் வந்த 6 பேர், அவரை வழிமறித்து, மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினர். இதனால், அவர் அலறி கூச்சலிட்டார். அவரது அலறல் சத்தம் கேட்டு, அப்பகுதி மக்கள் ஓடி வந்தனர். இதை பார்த்ததும், மர்மநபர்கள் தப்பிவிட்டனர்.