விருத்தாசலம்: தற்போது கொரோனா வைரஸ் தாக்குதல் உலகமெங்கும் பரவி அச்சுறுத்தலை ஏற்படுத்தி வரும் சூழ்நிலையில் தமிழக அரசு சார்பில் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளப்படுகிறது. இந்நிலையில் விருத்தாசலம் பாலக்கரையில் அமைந்துள்ள அம்மா உணவகத்தில் தினமும் 500க்கும் மேற்பட்டோர் உணவு சாப்பிட்டு விட்டு செல்கின்றனர். ஆனால் இங்கு சுகாதாரமின்றி உணவு சமைக்கும் பணி நடைபெறுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் நேற்று உணவு உண்பதற்கு வரும் பொதுமக்கள் நடந்து செல்வதற்கும், நின்று கொண்டு உணவு உண்பதற்கும் பயன்படுத்தும் தரைப்பகுதியில் அரிசியை கொட்டி அதில் கல் மற்றும் உமியை பிரித்தெடுக்கும் பணியில் உணவக பணியாளர்கள் ஈடுபட்டனர்.