கன்னியாகுமரி: சர்வதேச சுற்றுலா தலமான கன்னியாகுமரியில், தற்போது கொரோனா அச்சம் காரணமாக சுற்றுலா பயணிகள் வருகை இல்லை. இதனால் எப்போதும் களைகட்டும் கன்னியாகுமரி வெறிச்சோடி காணப்படுகிறது. ேமலும் விவேகானந்தர் பாறை மற்றும் திருவள்ளுவர் சிலைக்கு படகு போக்குவரத்தும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. ஒருசில கடைகள் மட்டுமே திறக்கப்பட்டுள்ளன. அவற்றிலும் வியாபாரம் டல்லடித்து வருகிறது.