சென்னை: முதல்வர் அலுவலக முதுநிலை தனிச் செயலர் தாமோதரன் மறைவுக்கு முதலமைச்சர் பழனிசாமி இரங்கல் தெரிவித்துள்ளார். கொரோனா தடுப்புப் பணியின் போது அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்றிய சேவை மகத்தானது. மேலும் அவருடைய குடும்பத்தில் ஒருவருக்கு தகுதியின் அடிப்படையில் அரசு வேலை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.