சென்னை: ஸ்ரீபெரும்புதூர் எம்எல்ஏ கே.பழனி (61) காய்ச்சல் காரணமாக கடந்த 12ம் தேதி மணப்பாக்கத்தில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு சோதனையில்அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இதையடுத்து எம்எல்ஏ பழனியின் மனைவி, மகன், மருமகள், மகள், மருமகன் உள்பட 30 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டு, அவர்களை வீட்டிலேயே தனிமைப்படுத்தினர். பரிசோதனையில் எம்எல்ஏ பழனியின் மனைவி விஜயா (50), மகள் திவ்யா (29), மாமியார் பாளையம்மாள் (70), கார் டிரைவர் டெய்லிஸ் (50) ஆகியோருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது.