காஞ்சிபுரம்: கொரோனா பரவலை தடுக்க சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களின் சில பகுதிகளில் வரும் 19 முதல் 30ம் தேதிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. அதில், காஞ்சிபுரம் மாவட்டத்தில் எந்தெந்த பகுதிகள் என காஞ்சிபுரம் கலெக்டர் பொன்னையா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவா் வெளியிட்டுள்ள அறிக்கை.மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகள் முழுவதும், குன்றத்தூர் ஒன்றியத்தில் அய்யப்பன்தாங்கல், பரணிபுத்தூர், கெருகம்பாக்கம், கொளப்பாக்கம், கோவூர், தண்டலம், தரப்பாக்கம், 2ம் கட்டளை, மவுலிவாக்கம், பெரியபரணிச்சேரி, நந்தம்பாக்கம், சிறுகளத்தூர், கொல்லச்சேரி, கொழுமுணிவாக்கம், சிக்கராயபுரம், பூந்தண்டலம், மலையம்பாக்கம், திருமுடிவாக்கம் ஆகிய ஊராட்சிகள்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் மாங்காடு, குன்றத்தூர் பேரூராட்சிகளில் முழு ஊரடங்கு: கலெக்டர் அறிவிப்பு
- Mangadu
- கலெக்டர்
- அறிவிப்பு
- காஞ்சிபுரம் மாவட்டம்
- சேகரிப்பான் அறிவிப்பு
- குன்றத்தூர்
- நகர பஞ்சாயத்துகள்
- மங்காடு காஞ்சிபுரம் மாவட்டம்