சென்னை: லடாக் எல்லையில் சீன வீரர்களுடனான மோதலில் உயிரிழந்த தமிழக வீரர் பழனி அவர்களின் வீரத்திற்கும், தியாகத்திற்கும் தலைவணங்குகிறோம் என்று மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். மேலும் அவர் குடும்பத்திற்கு நம் அன்பும், ஆழ்ந்த அனுதாபங்களும் தெரிவிக்க வேண்டும், உயிர்களின் மதிப்பறிந்தவர் போரை விரும்ப மாட்டார்கள். அமைதி வழி தீர்வு காண்போம் என்று ட்விட்டரில் இரங்கல் தெரிவித்துள்ளார்.