பீஜிங்: சீனாவின் வுகான் நகரில் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்ட நிலையில், நேற்று அங்கு 66 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கடந்த சனிக்கிழமை நிலவரப்படி சிகிச்சை பெற்று வரும் 129 பேர் உள்பட இதுவரை 83,132 பேர் பாதித்துள்ளனர். அங்கு தற்போது வரை 78,369 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர். 4,634 பேர் வைரசுக்கு பலியாகி உள்ளனர். இதனிடையே கொரோனா கட்டுக்குள் கொண்டு வரப்பட்டு யாருக்கும் நோய் தொற்று இல்லாமல் இருந்தது. இந்நிலையில், நேற்று வுகானில் புதிதாக 66 பேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.