கல்லணை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே கடைமடை பகுதிகளில் தண்ணீர் வந்துவிடும்: அமைச்சர் காமராஜ் பேட்டி

திருவாரூர்: கல்லணை திறக்கப்பட்ட ஓரிரு நாளிலேயே கடைமடை பகுதிகளில் தண்ணீர் வந்துவிடும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார். காவிரியில் நடைபெறும் பால கட்டுமான பணிகளால் தண்ணீர் வருவதில் எந்த சிக்கலும் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். திருவாரூர் மாவட்டம் பிலாவடி கிராமத்தில் அமைச்சர் காமராஜ் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், அரசின் செயல்பாடுகளுக்கு எதிர்க்கட்சிகள் உறுதுணையாக இருக்க வேண்டும் என தெரிவித்தார்.

Related Stories: