13வது நாளாக முருகன் உண்ணாவிரதம்

வேலூர்: ராஜிவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை கைதியாக வேலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள முருகன், ஜீவசமாதி அடைய அனுமதிக்கக்கோரி தொடர் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளார். அவரிடம் போராட்டத்தை கைவிடும்படி அதிகாரிகள் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது.

இந்நிலையில் தொடர் உண்ணாவிரதம் காரணமாக உடல்நிலை பாதிக்கப்பட்ட முருகனுக்கு சிறை மருத்துவர்கள் கடந்த 3 நாட்களாக குளுக்கோஸ் ஏற்றினர். இந்நிலையில் 13ம் நாளான நேற்றும் முருகன் உண்ணாவிரதம் இருந்தார். உண்ணாவிரதத்தை கைவிடக்கோரி சிறைத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அவரிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

Related Stories: