ஜெய்பூர்: ‘எம்எல்ஏக்களை விலைக்கு வாங்கும் விசாரணை என்ற போர்வையில் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் போனை காங்கிரஸ் அரசு ஒட்டு கேட்கிறது,’ என ராஜஸ்தான் மாநில பாஜ குற்றம்சாட்டி உள்ளது.ராஜஸ்தானில் வரும் 19ம் தேதி மாநிலங்களவை தேர்தல் நடக்க உள்ள நிலையில், காங்கிரஸ் எம்எல்ஏ.க்களை விலைக்கு வாங்கி ஆட்சியை கவிழ்க்க பாஜ சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் குற்றம்சாட்டினார். இதனால், காங்கிரஸ் மற்றும் அதன் ஆதரவு சுயேச்சை எம்எல்ஏக்கள் 100 பேர் கடந்த 2 நாட்களாக சொகுசு விடுதியில் பலத்த பாதுகாப்புடன் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.