தமிழகம் முழுவதும் 16 கூடுதல் எஸ்பிக்களுக்கு எஸ்பியாக பதவி உயர்வு

சென்னை: தமிழகம் முழுவதும் 16 கூடுதல் எஸ்பிக்களை எஸ்பிக்களாக பதவி உயர்வு வழங்கி உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பத்துள்ள உத்தரவில் கூறியிருப்பதாவது:

தமிழக காவல் துறையில் கூடுதல் கண்காணிப்பாளராக பணியாற்றி வரும் ஆறுமுகசாமி, சுரேஷ்குமார், தங்கவேல், ரவி, குணசேகரன், குமார், சந்திரசேகர், சங்கரன், ஜோஸ் தங்கையா, ராஜாராம், ஸ்ரீதேவி, லாவண்யா, மாதவன், சக்திவேல், அன்பு, ஆரோக்கியம் என 16 பேருக்கு காவல் துறை கண்காணிப்பாளராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: