சென்னை: ஊர் பெயர்களை தமிழில் உச்சரிப்பது போல ஆங்கிலத்திலும் உச்சரிக்கக்கூடிய வகையில் அமைத்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. ஊர் பெயர்களை தமிழ் உச்சரிப்பை போன்றே ஆங்கிலத்திலும் அமைத்து அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் ஆங்கிலேயக் கம்பெனியாரின் ஆட்சிக்காலத்தின் போது ஏராளமான ஊர்களுக்கான தமிழ்ப்பெயர்கள் ஆங்கில மொழி வசதிக்காக வேறு எழுத்துகளால் குறிக்கப்பட்டன. குறிப்பாக, எழும்பூர் எக்மோர் என்றும், திருவல்லிக்கேணி ட்ரிப்ளிகேன் என்றும், வண்ணாரப்பேட்டை வாஷர்மேன் பேட் என்றும் அழைக்கப்பட்டு வந்தது. இதனை முழுமையாக மாற்ற வேண்டும் என்று பல தரப்பிலிர்ந்தும் கோரிக்கைகள் எழுந்து வந்த நிலையில், தற்போது அதனை செயல்படுத்த அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.