குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் வாகனங்களை மறிக்கும் ஒற்றை யானை

குன்னூர்: குன்னூர்-மேட்டுப்பாளையம் மலைப்பாதைசாலையில் செல்லும்  வாகனங்களை தடுத்து நிறுத்தும் ஒற்றை யானையால் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. குன்னூரில் தற்போது பலா பழ சீசன் என்பதால் அந்த பழங்களை சாப்பிட யானைகள் குன்னூர் மலைப்பாதைக்கு படையெடுத்து வருகின்றன. குன்னூர்-மேட்டுப்பாளையம் சாலையில் அவ்வாறு வந்த யானைகள் கூட்டத்தில் இருந்து ஒரு யானை பிரிந்து பர்லியாறு பகுதியில் சாலையில் உலா வருகிறது.

அந்த ஒற்றை யானை அந்த வழியாக காய்கறி மற்றும் பழங்கள் கொண்டு செல்லும் லாரிகளை வழி மறிக்கிறது.

இதனால் வாகன ஓட்டுநர்கள் கடும் அச்சமடைந்துள்ளனர். யானைக்கு பயந்து அவரகள் சில நேரங்களில் வாகனங்களை சாலையில் நிறுத்தும் நிலை ஏற்படுகிறது.அவ்வாறு நிறுத்தப்படுவதால் அந்த சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. எனவே வனத்துறையினர் சாலையில் உலா வரும் இந்த ஒன்றை யானையை கண்காணித்து வனப்பகுதிக்குள் விரட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வாகன ஓட்டுநர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: