ஆண்டிபட்டி: ஆண்டிபட்டி கணவாய் மலைப்பகுதியில் நடக்கும் அகல ரயில் பாதை பணி ஓரிரு மாதங்களில் நிறைவு பெறும் என தெரிவித்துள்ளனர். தேனி மாவட்டம், போடியில் இருந்து மதுரை செல்லும் மீட்டர் கேஜ் பாதையை, அகல ரயில் பாதையாக மாற்றுவதற்காக, கடந்த 2010ல் ரயில் சேவை நிறுத்தப்பட்டது. அதன்பின் தொடங்கப்பட்ட பணி கடந்த 2 ஆண்டுகளாக தீவிரமாக நடந்து வருகிறது. முதற்கட்டமாக மதுரையில் இருந்து உசிலம்பட்டி வரை பணிகள் முடிக்கப்பட்டு சோதனை ஓட்டமும் நடந்தது. அதை தொடர்ந்து உசிலம்பட்டியில் இருந்து போடி வரை அகல ரயில் பாதை பணி நடந்து வந்தது. கொரோனா ஊரடங்கால் நிறுத்தப்பட்ட பணிகள், கடந்த மே 11 முதல் மீண்டும் தொடங்கி நடந்து வருகிறது. ஆண்டிபட்டி அருகே, கணவாய் மலைப்பகுதியில், தண்டவாளங்கள் அமைப்பதற்காக பணிகள் நடந்து வருகின்றன.