சென்னை: சென்னையை அடுத்த மதுரவாயல் அருகே புலம்பெயர் தொழிலாளி போதையில் மனைவி, மகன், மகளை தீவைத்து எரித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மதுரவாயல் அடுத்த நூம்பல் புலியம்பேட்டை, இந்த கொடூரம் அரங்கேறியுள்ளது. சென்னை மதுரவாயல் அருகே புலியம்பேட்டை பகுதியை சேர்ந்தவர் மக்பூல் அலி, இவர் மனைவி கோரோசா பேகம். மக்பூல் அலி, நான்கு ஆண்டுகளுக்கு முன் கொல்கத்தாவில் கோரோசா பேகத்தை இரண்டாவது திருமணம் செய்துள்ளார். அதன்பின் கோரோசா பேகத்துடன் அவரது முதல் கணவருக்கு பிறந்த மகன், மகளையும் அழைத்து வந்து மதுரவாயலில் குடியிருந்து வந்தனர். கணவன், மனைவி, மகள் ஆகிய மூவரும், வேலப்பன் சாவடியில் உள்ள காலணி தயாரிக்கும் தொழிற்சாலையில் வேலைசெய்து வந்தனர். ஊரடங்கால் தொழிற்சாலை மூடப்பட்ட நிலையில், அடிக்கடி குடித்துவிட்டு வந்த மக்பூல் அலி, மனைவி மீது சந்தேகம் அடைந்து தகராறில் ஈடுபட்டுள்ளார்.