ஜெ. அன்பழகனை தொடடர்ந்து குடும்பத்தினருக்கும் கொரோனா பாதிப்பு

சென்னை: ஜெ.அன்பழகன் எம்எல்ஏவை ெதாடர்ந்து மனைவி, மகன், மருமகள், பேத்திக்குக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். சென்னை சேப்பாக்கம்- திருவல்லிக்கேணி தொகுதி திமுக எம்எல்ஏ ஜெ.அன்பழகன் கொரோனா பாதிப்பால் குரோம்பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் கடந்த 2ம் தேதி முதல் சிகிச்சை பெற்று வருகிறார்.  இந்த நிலையில் ஜெ.அன்பழகனின் மனைவி, மகன், மற்றும் மருமகள், பேத்தி ஆகியோருக்கும் ெகாரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதனால், அவர்கள் அனைவரும் வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

Related Stories: