கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம் நந்திவரம் கூடுவாஞ்சேரி பேரூராட்சியில் 18 வார்டுகள் உள்ளன. இங்கு ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த பேரூராட்சியில் நிரந்தர பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் என 175 பேர் உள்ளனர். பேரூராட்சியில் துப்புரவு பணியாளர்கள், பம்ப் ஆபரேட்டர்கள், குடிநீர் பராமரிப்பு பணியாளர்கள், தெருவிளக்கு பராமரிப்பு பணியாளர்கள் என கடந்த 14 ஆண்டுகளாக வேலை செய்கிறார்கள்.
இவர்களுக்கு,₹10 ஆயிரம் மட்டுமே சம்பளம் வழங்கப்படுகிறது. மாவட்ட நிர்வாகம் நிர்ணயித்த ஊதியத்தை வழங்க கோரி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் தொடர்ந்து மனு கொடுத்துள்ளனர். ஆனால், இதுவரை நிர்ணயித்த சம்பளத்தை வழங்கவில்லை என கூறப்படுகிறது.