சென்னை: சென்னையில் இருந்து 75 கி.மீ தொலைவில் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் 2வது விமான நிலையத்தை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. தென்னிந்தியாவின் தொழில்துறை மையமாக உருவெடுத்துள்ள சென்னை மாநகரில் தற்போதுள்ள மீனம்பாக்கம் விமான நிலையத்தில் பயணிகள் நெருக்கடி அதிகரித்துவிட்டதால் 2வது விமான நிலையம் அமைப்பது அவசியமாகிவிட்டது. இந்த திட்டத்துக்காக காஞ்சிபுரம் மாவட்டம் பரந்தூரை மையமாக கொண்டு காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதூர் தாலுகாவுக்கு உட்பட்ட பகுதியில் இடங்கள் தேர்வு செய்யப்பட்டன. ஆனால், கடைசி நேரத்தில் தமிழக அரசு முடிவை மாற்றிவிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.