ஊழியரின் கார் டிரைவருக்கு கொரோனா மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மூடல்

சென்னை: ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு பணிகள் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும் மத்திய நிர்வாக தீர்ப்பாயத்தின் சென்னை பெஞ்ச் உயர் நீதிமன்ற வளாகத்தில் உள்ளது. இங்கு பணியாற்றும் ஒரு ஊழியரின் கார் ஓட்டுநருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டது. இதனால் தீர்ப்பாயத்தை இன்றும் நாளையும் மூடும் அறிவிப்பாணையை தீர்ப்பாய பதிவாளர் வெளியிட்டுள்ளார். தீர்ப்பாய அலுவலக வளாகம் முழுவதும் கிருமி நாசினி தௌிக்கப்பட்டு உரிய பாதுகாப்பு பணிகள் ேமற்கொள்ளப்பட்டவுடன் வரும் 8ம் தேதி முதல் தீர்ப்பாயம் செயல்படும். சம்பந்தப்பட்ட கார் டிரைவருடன் தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக கொரோனா பரிசோதனை செய்ய வேண்டும் என்றும் அதன்பிறகு கொரோனா தொடர்பான வழிகாட்டுமுறைகளை ஊழியர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் பதிவாளர் தெரிவித்துள்ளார்.

Related Stories: