கலைஞருக்கு கமல்ஹாசன் புகழஞ்சலி

சென்னை: கலைஞர் கருணாநிதியின் பிறந்த நாளையொட்டி மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் அவருக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் நேற்று அவர் கூறியிருப்பதாவது: பகுத்தறிவை எழுத்தில் பேசி, செந்தமிழில் பெயர் சூட்டல் தொடங்கி, பேருந்தில் திருக்குறள் வரை தமிழ் ஊட்டிய அரசியல் அறிஞர் கலைஞரை இந்நாளில் நினைவு கூர்கிறேன். சமூக நீதியையும் வளர்ச்சியையும் தன்னால் இயன்றவரை சாத்தியமாக்கிய அரசியல் ஆளுமை அவர். இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.

Related Stories: