சென்னை: சென்னையில் ஊர்க்காவல்படை காவலர்கள் தொடங்கி, கூடுதல் கமிஷனர் வரை கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் சிகிச்சை முடிந்து வீட்டில் தங்களை 14 நாட்கள் தனிமைப்படுத்தி பிறகு மருத்துவரின் ஆலோசனையின்படி மீண்டும் பணிக்கு திரும்புகின்றனர். அவ்வாறு பணிக்கு வரும் காவலர்களை உயர் அதிகாரிகள் சம்பந்தப்பட்ட காவல் நிலையத்திற்கே சென்று பூச்செண்டு கொடுத்து கவுரவித்து வருகின்றனர். இதன்மூலம் காவலர்கள் பணியின்போது கொரோனா குறித்து எந்தவித பயம் இன்றி தொடர்ந்து தங்களது பணிகளை செய்ய இது உபயோகமாக இருக்கும் என உயர் அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது. இந்நிலையில், புளியந்தோப்பு காவல் நிலைய உதவி ஆய்வாளர் முருகானந்தம் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.