சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு ரூ.128க்கு உயர்ந்து ரூ. 36,056க்கு விற்பனை!!

சென்னை :சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று சவரனுக்கு 128 ரூபாய் மட்டும் உயர்த்தப்பட்டுள்ளது. தொடர்ந்து ஐந்தாவது நாளாகத் தங்கம் விலையில் ஏற்றம் காணப்படுகிறது. இதே நிலை நீடித்தால் ஆபரணத் தங்கத்தின் விலை விரைவில் 37,000 ரூபாயைத் தாண்டிவிடும் என்று வாடிக்கையாளர்கள் அஞ்சுகின்றனர்.

சென்னையில் இன்று (ஜூன் 2) ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.4,507 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. நேற்று இதன் விலை 4,491 ஆக இருந்தது. இன்று தங்கத்தின் விலை கிராமுக்கு 16 ரூபாய் உயர்ந்துள்ளது.அதேபோல, நேற்று 35,928 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட 8 கிராம் ஆபரணத் தங்கம் இன்று 128 ரூபாய் உயர்ந்து 36,056 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

வெள்ளி விலையும் இன்று உயர்ந்துள்ளது. ஒரு கிராம் வெள்ளியின் விலை நேற்று ரூ.54.70 ஆக இருந்தது. இன்று அதன் விலை ரூ.54.80 ஆக அதிகரித்துள்ளது. ஒரு கிலோ வெள்ளி 54,800 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Related Stories: