ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக தமிழகத்தில் ஒரே நாளில் 5,562 பேர் கைது

சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும்  நேற்று ஒரே நாளில் 5,562 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3,014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ம் தேதி மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய அனுமதி இல்லாமல் வாகனங்களில் சுற்றிவரும் நபர்கள் மீது  போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நேற்று ஒரே நாளில் நோய் தொற்று பரப்பும் வகையில் வெளியே சுற்றியதாக தமிழகம் முழுவதும் 5 ஆயிரத்து 313 வழக்குகள் பதிவு செய்து 5 ஆயிரத்து 562 பேரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அனைவரையும்  சொந்த ஜாமினில் விடுவித்தனர். அவர்களிடம்  இருந்து 3 ஆயிரத்து 14 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் விதிமுறைகளை மீறியதாக 25 லட்சத்து 32 ஆயிரத்து 680 ரூபாய் அபராதமாக வசூலிக்கப்பட்டது.

Related Stories: