சென்னை: ஊரடங்கு உத்தரவை மீறி வெளியே சுற்றியதாக மாநிலம் முழுவதும் நேற்று ஒரே நாளில் 5,562 பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 3,014 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் 24 ம் தேதி மாலை 6 மணி முதல் மாநிலம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உரிய அனுமதி இல்லாமல் வாகனங்களில் சுற்றிவரும் நபர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து வருகின்றனர்.