சென்னை: கொரோனாவால் பாதிக்கப்பட்டவருக்கு ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்க மறுத்ததால், மூச்சுத் திணறல் ஏற்பட்டு வீட்டிலேயே துடிதுடித்து இறந்தார். சென்னை புதுவண்ணாரப்பேட்டை திருவொற்றியூர் நெடுஞ்சாலையை சேர்ந்த 73 வயது முதியவருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி இருந்ததால், தண்டையார்பேட்டையில் உள்ள காலரா மருத்துவமனையில் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. இதனால், மருத்துவமனை நிர்வாகம் அவரை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்க முன்தினம் பரிந்துரை செய்தது. இதையடுத்து, அவரது உறவினர்கள் கொரோனா அவசர பிரிவிற்கு தொடர்பு கொண்டனர். ஆனால், ஆம்புலன்ஸ் அனுப்பவில்லை, என கூறப்படுகிறது. இதனால், ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு தொடர்பு கொண்டுபோது, அங்கு போதிய இட வசதி இல்லை எனவும், பாதிக்கப்பட்ட முதியவரை வீட்டில் தனிமைப்படுத்தும்படியும் தெரிவித்துள்ளனர்.