சென்னை: டாஸ்மாக் கடைகளில் கூடுதல் விலை வைத்து மது விற்பதை தடுக்க திடீர் ஆய்வு செய்ய அதிகாரிகளுக்கு டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, டாஸ்மாக் அதிகாரி ஒருவர் கூறியதாவது: தமிழகத்தில் தற்போது வழக்கத்தை விட கூடுதலாக மது விற்பனை நடக்கிறது. இதேபோல், மதுபானங்களும் அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார்கள் வருகின்றன. இதை தடுக்க சேலம், திருச்சி, மதுரை மண்டலங்களில் தீவிர ஆய்வு நடத்த மாவட்ட மேலாளர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.