போடி: கொரோனா பரவலை தடுக்கும் வகையில் போடியில் 2 பகுதிகளில் தற்காலிக சந்தை அமைக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. தேனி மாவட்டம், போடியில் பரமசிவன் கோயில் தெருவில் காய்கறி சந்தை இயங்கி வந்தது. இந்த சந்தையில் சமூக இடைவெளியின்றி பொதுமக்கள் அதிகளவில் காய்கறிகள் வாங்கி வந்தனர். இதனால் இப்பகுதியில் கொரோனா பரவும் அபாயம் நிலவியது. இதையடுத்து இப்பகுதியில் தடுப்புகள் அமைத்து போடி நகராட்சி மற்றும் போலீசார் சார்பில் சந்தை மூடப்பட்டது.