சென்னை: அமைச்சர் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டவரின் முன் ஜாமீன் மனுவை சென்னை உயர் நீதிமன்றம் மீண்டும் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. தமிழக தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் மீது சமூக வலைத்தளங்களில் அவதூறான கருத்தை வெளியிட்டதாக பண்ருட்டியை சேர்ந்த பாலாஜி என்பவர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கில் தனக்கு முன் ஜாமீன் கோரி பாலாஜி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த நீதிபதி மனுவை தள்ளுபடி செய்தார்.