சென்னை: சென்னை அருகே வடமாநில இளம் தம்பதி வறுமை காரணமாக வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனாவால் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் நோக்கில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசுக்கு பல்வேறு தனியார் அமைப்புகளும் நிவாரணம் வழங்கி உதவி செய்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக நாடு முழுவதும் பிறப்பிக்கப்பட்டு நடைமுறையில் இருந்து வருகிறது. பொது முடக்கத்தான் பல்வேறு தொழில்கள் முடங்கியுள்ளன. இதனிடையே தாம்பரம் அடுத்த மப்பேட்டில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்த இருவருக்கும் ஊரடங்கினால் வேலை கிடைக்கவில்லை. வருமானம் இல்லாமல் தவித்த இவர்கள் வீட்டிலேயே முடங்கி கிடந்துள்ளனர்.