சென்னை: ரயில்வே ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர, அனைத்து அலுவலகங்களையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த உதவி லோகோ பைலட் ஆக பணி புரிந்து வரும் நபருக்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டதில் கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதேபோன்று, தெற்கு ரயில்வே தலைமையகத்தில் உள்ள முதன்மை தலைமை செயல்பாட்டு மேலாளர் (பிசிஓஎம்) அலுவலகத்தில் பணிபுரிந்து வரும் ஒருவருக்கும் கடந்த கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு காய்ச்சல், சளி, இருமல் போன்ற கொரோனா அறிகுறி இருந்ததையடுத்து சோதனை செய்யப்பட்டு முடிவுக்காக காத்திருந்தனர்.
தெற்கு ரயில்வே தலைமையகத்தில் கட்டுப்பாட்டு அலுவலகம் தவிர மற்ற அலுவலகங்களை மூட உத்தரவு: ஊழியர்களுக்கு கொரோனா உறுதியால் அதிரடி
- அலுவலகங்கள்
- மூடல்
- தெற்கு ரயில்வே தலைமையகம்
- கொரோனா
- பணியாளர்கள் பணியாளர்கள் நடவடிக்கை ஆணை
- தெற்கு ரயில்வே
- ஒழுங்குமுறை அலுவலகம்