சென்னை: பூக்கடை, பாரிமுனை, பல்லவன் சாலை, பிராட்வே உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில வாரங்களாக போதை ஏற்றும் வகையில், தர்பூசணி பழத்தில் பீர் தயாரித்து விற்பனை செய்து வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. பூக்கடை துணை கமிஷனர் ராஜேந்திரன் உத்தரவின்பேரில், இன்ஸ்பெக்டர் சித்தார்த் சங்கர் ராய் தலைமையில் தனிப்படை போலீசார் நேற்று முன்தினம் மேற்கண்ட பகுதிகளில் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது முத்துசாமி பாலம் அருகே ஆட்டோவில் சந்தேக நிலையில் ஒரு சிறுவன் உள்பட 2 பேர் வந்தனர்.அவர்களை மடக்கி போலீசார் சோதனை செய்தனர். அப்போது, அவர்களிடம் தர்பூசணி, ஈஸ்ட் உள்ளிட்ட பல்வேறு போதை பொருட்கள் இருந்தது. இதனையடுத்து, இருவரையும் பிடித்து காவல்நிலையம் கொண்டு வந்து விசாரித்தனர்.