சென்னை: புதிய வயவந்தனா திட்டத்தை எல்ஐசி நிறுவனம் அறிவித்துள்ளது. வயவந்தனா திட்டம் மத்திய அரசால் அறிமுகம் செய்யப்பட்டது. 60 வயதுக்கு மேல் உள்ள குடிமகன்களுக்கு ஓய்வூதிய திட்டமாக இது செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தை செயல்படுத்த எல்ஐசி நிறுவனத்துக்கு மட்டுமே அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், திருத்தப்பட்ட விகிதத்தில் புதிய வயவந்தனா திட்டத்தை எல்ஐசி அறிவித்துள்ளது. இது கடந்த 26ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. வரும் 2023ம் ஆண்டு மார்ச் 31 வரை மூன்று நிதியாண்டுகளுக்கு இந்த திட்டம் அமலில் இருக்கும். இதில் நேரடியாக எல்ஐசி அலுவலகத்துக்கு சென்றும், ஆன்லைன் மூலமாகவும் இந்த திட்டத்தில் சேரலாம்.