ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நீதிமன்றம்: ஜெ.தீபா பேட்டி

சென்னை: மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த தீர்ப்பு; ஜெயலலிதாவின் சொத்துக்களுக்கு வாரிசு யார் என்ற கேள்விக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளது நீதிமன்றம் என ஜெ.தீபா தெரிவித்துள்ளார். வேதா இல்லம் மட்டுமல்லாது, ஜெயலலிதாவின் அனைத்து சொத்துக்களுக்கும் நாங்களே வாரிசுதாரர்கள். எனக்கும், எனது சகோதரருக்கும் இடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. ஜெயலலிதாவின் சொத்துகள், நம்பிக்கையை பாதுகாக்கும் கடமை எங்களுக்கு உள்ளது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் இல்லத்தை கையகப்படுத்தும் ஆளுநரின் அவசர சட்டம் செல்லாது எனவும் கூறினார்.

Related Stories: