சென்னை: தமிழகத்தில் தற்போது நிலவும் வறண்ட வானிலை காரணமாக கரூர், வேலூர், திருத்தணி, திருச்சி ஆகிய நான்கு இடங்களில் வெயில் 108 டிகிரியாக இருந்தது. இதையடுத்து, ஈரோடு, சேலம் 106 டிகிரி, மதுரை விமான நிலையம் 104 டிகிரி, தர்மபுரி, பாளையங்கோட்டை, திருப்பத்தூர் 102 டிகிரி வெயில் நிலவியது. சென்னை உள்ளிட்ட பெரும்பாலான மாவட்டங்களில் சராசரியாக 100 டிகிரி வெயில் நிலவியது. இந்நிலையில், வெப்ப சலனம் காரணமாக மாநிலத்தின் பல இடங்களில் மழை பெய்துள்ளது.
இதையடுத்து, வெப்ப சலனம் காரணமாக தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் இடியுடன்கூடிய லேசான மற்றும் மிதமான மழை பெய்யும். இது தவிர, மதுரை, திருச்சி, கரூர், தர்மபுரி, சேலம், வேலூர், திருப்பத்தூர், மாவட்டங்கள் மற்றும் திருத்தணியில் அதிகபட்ச வெப்ப நிலை 40 டிகிரி செல்சியஸ் முதல் 42 டிகிரி செல்சியஸ் வரை பதிவாகும்.