சென்னை: தமிழகத்தில் இணையதளம் மற்றும் செல்போன் செயலி ஆகியவற்றின் மூலம், பொதுமக்கள் மற்றும் லாரி உரிமையாளர்கள் தங்களுக்குத் தேவையான மணலை முன்பதிவு செய்து பெற்றுக்கொள்ளும் வசதியை தமிழகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டது. இதற்காக, தமிழ்நாடு மணல் இணைய சேவை www.tnsand.in என்ற இணையதளத்தையும், tnsand என்ற செல்போன் செயலியையும் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிமுகம் செய்து தொடங்கி வைத்தார். இச்சேவை மூலம், மணல் லாரிகள் நீண்ட வரிசையில் காத்திருப்பது தவிர்க்கப்பட்டு, தங்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரத்தில் குவாரிகளுக்கும், மணல் விற்பனை நிலையங்களுக்கும் வந்து நேரடியாக மணலை பெற்றுக்கொள்ளலாம்.
லாரி உரிமையாளர்கள் மகிழ்ச்சி: ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தோருக்கு இன்று முதல் மணல் விற்பனை: தமிழக பொதுப்பணித்துறை அறிவிப்பு
- லாரி உரிமையாளர்கள்
- ஆன்லைனில் முன்பதிவு செய்ய மணல் விற்பனையாளர்கள்: பொதுப்பணித் துறை லாரியை அறிவிக்கிறது
- அறிவிப்பு
- தமிழ்நாடு பொதுப்பணித்துறை