கூடுவாஞ்சேரி: செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம் பெருமட்டுநல்லூர் ஊராட்சியில், 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்நிலையில், வண்டலூர் கோட்டத்தில் உள்ள 20 டாஸ்மாக் கடைகள் பலத்த போலீஸ் பாதுகாப்புடன் நேற்று காலை திறக்கப்பட்டன. இதையறிந்ததும், பெருமட்டுநல்லூர் ஊராட்சியை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கூடுவாஞ்சேரி - நெல்லிக்குப்பம் சாலையில் திரண்டனர். பின்னர் திடீர் மறியலில் ஈடுபட முயன்றனர்.