சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,000-ஐ தாண்டியது: ராயபுரத்தில் 2,000-ஐ நெருங்குகிறது

சென்னை : சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.தமிழகத்தில் கொரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 16,277 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு 8,324 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில்  587 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதில் குறிப்பாக சென்னையில் உள்ள 5 மண்டலங்களில் கொரோனா தொற்று 1000-ஐ தாண்டியுள்ளது. இதையடுத்து கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை  10,576 ஆக அதிகரித்துள்ளது. இதில் 63 பேர் வெளிமாவட்டங்களில் இருந்து வந்தவர்கள் என தெரிய வந்துள்ளது. சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் எந்தெந்த மண்டலங்களில் எத்தனை பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் என்ற விவரத்தை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.

சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் அதிகபட்சமாக ராயபுரத்தில் 1,981 பேருக்கு கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. கோடம்பாக்கத்தில் 1,460 பேருக்கும், திரு.வி.க.நகரில் 1,188 பேருக்கும், அண்ணாநகரில் 867 பேருக்கும் கொரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது. தண்டையார்பேட்டையில் 1044 பேரும், தேனாம்பேட்டையில் 1118 பேரும், திருவொற்றியூரில் 300 பேரும், கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். வளசரவாக்கத்தில் 703 பேருக்கும், பெருங்குடியில் 168 பேருக்கும், அடையாறில் 579 பேருக்கும், அம்பத்தூரில் 446 பேருக்கும் கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. ஆலந்தூரில் 121 பேருக்கும், மாதவரத்தில் 223 பேருக்கும், சோழிங்கநல்லூரில் 173 பேருக்கும், மணலியில் 142 பேருக்கும் தொற்று உறுதியாகியுள்ளது.

Related Stories: